அமைச்சர் துரைமுருகன் தலைமையில் காவேரி விவகாரம் தொடர்பான குழுவில் அதிமுக பங்கேற்கும் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அதிமுக நாடாளுமன்ற குழு தலைவர் தம்பிதுரை செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது..
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
” அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 2 தினங்களுக்கு முன் டெல்லி வந்து அமீத் ஷாவை சந்தித்தார். பா.ஜ.க.வுடனான கூட்டணி சுமூகமாக செல்கிறது. நாடாளுமன்றத்தில் மசோதாக்கள் குறித்து அனைத்து கட்சி கூட்டம் நடக்கிறது. காவேரி விவகாரம் குறித்து அமைச்சர் துரைமுருகன் டெல்லி வர உள்ளார். அவரது தலைமையிலான குழுவில் அதிமுக சார்பில் நானும் சந்திரசேகர் கலந்து கொள்கிறோம்.
நாடாளுமன்ற கூட்டத் தொடர் முக்கியமான நிகழ்வாக இருக்கும். ஒரே நாடு ஒரே தேர்தல் முலம் பாராளுமன்றத்திற்கும் தமிழக சட்டமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடக்கும் என எதிர்பார்ப்பாக உள்ளது.
தமிழகத்தில் கூட்டணிகள் திராவிட இயக்கங்கள் தலைமையில் தான் இருக்கும். அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் தலைமையில் தான் கூட்டணி இருந்தது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தான் தேர்தலை சந்திப்போம். எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்க பாடுபடுவோம். எங்கள் இடையே கருத்து வேறுபாடு எதுவும் இல்லை. தேர்தலில் சுமூகமாக செயல்பட்டு வெற்றி பெற பாடுபடுவோம்.
பிரதமர் மோடி பல்லாண்டு காலம் வாழ்ந்து 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 3வது முறையாக வெற்றி பெற்று இந்தியாவை நல்வழிப்படுத்துவார். உலகத்தில் மாபெரும் தலைவராக வளர்ந்து வருவது இந்தியாவிற்கு பெருமை ஆகும். இவ்வாறு தம்பித்துரை தெரிவித்துள்ளார்.