மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் சர்வதேச அலைச்சறுக்கு போட்டியில் மகளிர் பிரிவில் ஜப்பானின் சாரா வக்கிடா சாம்பியன் பட்டம் வென்றார்.
மாமல்லபுரத்தில் சர்வதேச அலைச்சறுக்கு போட்டி கடந்த 14-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, தாய்லாந்து, சிங்கப்பூர் மலேசியா, வங்கதேசம், மியன்மார், உள்ளிட்ட 12 நாடுகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட சர்வதேச அலைச்சறுக்கு வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில் மகளிர் சாம்பியன் பட்டத்திற்கான இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் ஜப்பான் வீராங்கனைகள் ஷினோ மட்சுடா, சாரா வக்கிடா மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், 13.50 புள்ளிகள் எடுத்து ஷினோ மட்சுடாவை 0.40 புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாரா வக்கிடா சாம்பியன் பட்டம் வென்றார்.







