சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடர்ந்து, முதல் முறையாக சர்வதேச ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டி இன்று தொடங்குகிறது.
சென்னை ஓபன் உலக மகளிர் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் விளையாட்டு அரங்கில் இன்று தொடங்குகிறது. செப்டம்பர் 18-ம் தேதி வரை ஒரு வாரம் நடைபெறும் இந்த போட்டியில் சர்வதேச அளவிலான விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த போட்டிகளுக்காக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மைதானம் சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளன.
இன்று களைகட்டும் இந்த போட்டிகள் ஒற்றையர் இரட்டையர் என இரண்டு பிரிவுகளில் நடைபெறுகிறது. ஒற்றையர் பிரிவில் 32 வீராங்கனைகளும் இரட்டையர் பிரிவில் 32 வீராங்கனைகளும் மோதவுள்ளனர். மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டியில் பங்கேற்கும் 32 வீராங்கனைகளில் 26 வீராங்கனைகள் நேரடியாக தகுதி சுற்றுக்கு தேர்வு பெற்றவர்கள். இதில் வைல்டு கார்டும் அடங்கும். மீதமுள்ள 6 வீராங்கனைகள் தகுதி சுற்று மூலம் பிரதான சுற்றில் விளையாடவுள்ளனர். இதற்கான போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
இதில் 2 தமிழ்நாட்டு வீரர்கள் உட்பட 5 இந்திய வீரர்கள் பங்கேற்றனர். இந்திய அளவில் முதல் இரண்டு இடத்தில் உள்ள அங்கிதா ரெய்னா மற்றும் கர்மன் தாண்டி ஆகியோருக்கு வையல்கார்டு மூலம் விளையாடும் வாய்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடதக்கது. சென்னை ஒபன் தொடரில் மகுடம் சூடும் வீராங்கனைக்கு சர்வதேச அளவில் 250 புள்ளிகள் வழங்கப்படும்.
மேலும் இந்த தொடரில் வெற்றி பெறும் வீராங்கனைகளுக்கு 2 கோடி ரூபாய் பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக இந்தியாவில் மகளிருக்கான டென்னிஸ் போட்டி நடைபெறுவது மகிழ்சியளிக்கிறது என இந்திய வீராங்கனைகள் தெரிவித்தனர். SDTA டென்னிஸ் மைதானத்தில் 5 ஆண்டுகளுக்கு பின்பு போட்டிகள் நடைபெறுவதால், ரசிகர்கள் போட்டியை கான ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அ.மாரித்தங்கம்







