கன்னியாகுமரியில் நடைபெற்ற சர்வதேச பட்டத் திருவிழாவை ஏராளமானோர் கண்டுரசித்தனர். இதில், வண்ண வண்ண பட்டங்கள் வானில் பறக்கவிடப்பட்டன.
சர்வதேச சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில், கன்னியாகுமரியில், பட்டத் திருவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதை, அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதில், வண்ண வண்ண பட்டங்கள் வானில் பறக்கவிடப்பட்டன. தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூரை சேர்ந்தவர்கள் இதில் பங்கேற்றனர். பல்வேறு வடிவங்களில் பறக்கவிடப்பட்ட பட்டங்களை, மாணவ மாணவிகள், சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்டோர் கண்டுகளித்தனர்.







