‘கல்வி, தொழில் உள்ளிட்ட பல துறைகளில் ஒருங்கிணைந்த வளர்ச்சியே, தற்போதைய தேவை’ – ஆளுநர் ஆர்.என். ரவி

கல்வி, தொழில் உள்ளிட்ட பல துறைகளில் ஒருங்கிணைந்த வளர்ச்சியே, இந்தியாவிற்கு தற்போதைய தேவை என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார். சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் 22-வது பட்டமளிப்பு…

கல்வி, தொழில் உள்ளிட்ட பல துறைகளில் ஒருங்கிணைந்த வளர்ச்சியே, இந்தியாவிற்கு தற்போதைய தேவை என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.

சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் 22-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கால்நடைத்துறை அமைச்சரும், பல்கலைக்கழக துணை வேந்தருமான அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையில் நடைப்பெற்ற விழாவிற்கு பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்நாடு ஆளுநருமான ஆர்.என்.ரவி தலைமை வகித்தார். தொடர்ந்து பட்டதாரிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி ஆளுநர் சிறப்புரையாற்றினார்.

உலகின் வளர்ந்த நாடுகள் பல சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிட்டு அவற்றை குறைப்பதற்கு எவ்வித முன்னெடுப்புகளும் எடுக்காத நிலையில் இந்தியா 2070-ஆம் ஆண்டுக்குள் கரியமில வாயு இல்லாத நாடாக மாற்றுவவதற்கு உறுதிபூண்டு உள்ளதாக தெரிவித்தார். இது மிக தைரியமான முடிவு எனவும் குறிப்பிட்டு பாராட்டு தெரிவித்தார்.

அண்மைச் செய்தி: ‘முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனைத்தையும் தகர்த்தெறியும் திறமை உள்ளது’ – கே.எஸ்.அழகிரி புகழாரம்

நாட்டின் எதிர்கால கனவு திட்டங்களை நிறைவேற்றுவதற்கு இளைஞர்கள் தொழில் முனைவோர்களாக மாறிட வேண்டும் எனக்குறிப்பிட்ட ஆளுநர், தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் பல்வேறு துறைகளில் முன்னணியில் இருந்தாலும் மாநிலங்களுக்கு இடையே சில துறை வளர்ச்சியில் சமமற்று போக்கு காணப்படுவதாகக் கூறினார். இதனை நிவர்த்தி செய்திடும் வகையில், மாநிலங்களுக்கு இடையே ஒருங்கிணைந்த வளர்ச்சியே இன்றைய இந்தியாவிற்கு தேவை எனவும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.