நாட்டின் பொருளாதாரம் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருவதாக, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்திய தொழில் கூட்டமைப்பின் ஆண்டுக் கூட்டத்தில், காணொலி மூலம் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். தொழில்துறையை சேர்ந்தவர்களின் பங்களிப்பால், வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்துள்ளதாகவும், நாட்டின் பொருளாதாரம் வேகமெடுத்துள்ளதாகவும், பிரதமர் மோடி கூறியுள்ளார். விவசாயிகளுக்கு உள்ளூர் மற்றும் சர்வதேச சந்தை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனால் வேளாண்துறை ஏற்றம் பெறும், என்றும் அவர் குறிப்பிட்டார். “சுயசார்பு இந்தியா” திட்டத்தின் கீழ், நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்கும் ஆர்வம், தற்போது பொதுமக்களிடையே அதிகரித்துள்ளதாகவும், இதற்கேற்ப தொழில்துறை கொள்கைகளும் திட்டமிடுதலும் வகுக்கப்பட வேண்மடும் என்றும், பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.