இங்கிலாந்துக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியில் அடுத்தடுத்து விக்கெட்டு களை இழந்து, இந்திய அணி தடுமாறி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
நாட்டிங்காமில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டி, டிராவில் முடிந்ததை அடுத்து 2 வது டெஸ்ட் போட்டி, லண்டன் லார்ட்சில் நடந்து வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
முதலில் ஆடிய இந்திய அணி, முதல் இன்னிங்சில் 364 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. கே.எல்.ராகுல் 129 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி, 391 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. கேப்டன் ஜோ ரூட் 180 குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய தரப்பில் முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளையும் இஷாந்த் சர்மா 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். இதையடுத்து இங்கிலாந்து அணி 27 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
தனது 2 வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில் கே.எல்.ராகுலும் ரோகித் சர்மாவும் களமிறங்கினர். முதல் இன்னிங்ஸில் சதமடித்த ராகுல், இந்த இன்னிங்ஸில் மார்க் வுட் பந்துவீச்சில் 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதையடுத்து புஜாரா, ரோகித் சர்மாவுடன் இணைந்தார்.
நின்று ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மாவும், மார்க் வுட் பந்துவீச்சில் மொயின் அலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 21 ரன்கள் எடுத்தார். பின்னர் கேப்டன் விராத் கோலி களமிறங்கினார். 4 பவுண்டரிகளுடன் 20 ரன்கள் எடுத்த நிலையில் அவர் விக்கெட்டை சாம் கர்ரன் வீழ்த்தினார். இதனால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறி வருகிறது.
உணவு இடைவேளை வரை இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 56 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. புஜாரா 3 ரன்களுடன் ரஹானே ஒரு ரன்னுடனும் ஆடி வருகின்றனர்.
……..