இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,132 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக, கொரோனா 2வது அலையின் பாதிப்புகள் குறைந்து வருகின்றன. இதற்கு தடுப்பூசி போடுவதை தீவிரப்படுத்தி இருப்பதும் மத்திய, மாநில அரசுகளின் தீவிர நடவடிக்கையுமே காரணம்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், நாடு முழுவதும் ஒரே நாளில் 18,132 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 18,166 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று குறைந்துள்ளது.
கேரளாவில், நேற்று மட்டும் 10, 691 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அங்கு 85 பேர் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் 193 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்து 50 ஆயிரத்து 782 ஆக உள்ளது.
ஒரே நாளில், 21,563 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே 32 லட்சத்து 93 ஆயிரத்து 478 ஆக உள்ளது. நாடு முழுவதும் 95,19,84,373 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.