இந்தியாவில் கொரோனா பாதிப்பு இவ்வளவா?

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,906 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 45 பேர் உயரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரித்து…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,906 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 45 பேர் உயரிழந்துள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், அரசு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் உள்ளிட்டவற்றை தொடர்ந்து கடைப்பிக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

செவ்வாய்க்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 16,615 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று மேலும் புதிதாக 16,906 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 கோடியே 96 லட்சத்து 69 ஆயிரத்து 850 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 457ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.30 சதவீதமாக உள்ளது. பாதிப்பு விகிதம் 4.96 சதவீதமாக உள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் 45 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 25 ஆயிரத்து 519ஆக அதிகரித்துள்ளது. தொற்றில் இருந்து 15,447 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 11 ஆயிரத்து 874 ஆக அதிகரித்துள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.