பேரிடர் காலத்தில் மொத்தம் 150 நாடுகளுக்கு இந்தியா, மருத்துவ பொருட்களை வழங்கி உள்ளதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பு கல்வியின் 14வது ஆண்டு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கப்படுவதாக கூறினார். பேரிடர் காலத்தில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் தான் பிரச்னையை சரி செய்ய முடியும் என்றும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.
கொரோனா தொற்று ஏற்பட்ட நெருக்கடியாக காலத்தில் உலக நாடுகளுக்கு மருத்துவ உதவி அதிகம் தேவைப்பட்டது. அதனால் பெரும்பாலான நாடுகள் தங்களால் இயன்ற உதவியை மற்ற நாடுகளுக்கு செய்து வந்தன. அந்தவகையில் கொரோனா காலத்தில் இந்தியாவின் மருத்துவ உதவிகள் உலக சுகாதார அமைப்பால் பாராட்டப்பட்டது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மருந்துகள் பல்வேறு நாடுகளுக்கு அனுப்பப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.







