பிரிக்ஸ் நாடுகளின் முதல் கூட்டம் இன்று தலைநகர் டெல்லியில் கணொலி மூலம் நடைபெற்றது…
பிரிக்ஸ் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் முதல் கூட்டம் தலைநகர் டெல்லியில் கணொலி மூலம் இந்தியா நடத்தியது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பிரேசில், ரஷ்யா, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கணொலி மூலம் பங்கேற்றனர்..
இதில் உலகளாவிய பொருளாதாரக் கண்ணோட்டம், புதிய மேம்பாட்டு வங்கி, சர்வதேச நாணய நிதிய சீர்திருத்தங்கள், பிரிக்ஸ் பத்திர நிதி மற்றும் பிரிக்ஸ் விரைவான தகவல் பாதுகாப்பு சேனல் போன்றவை விவாதிக்கப்பட்டதாக நிதி அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.







