நேற்றை விட சற்று குறைந்த கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 37 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  நாடு முழுவதும் படிப்படியாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில்,…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 37 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

நாடு முழுவதும் படிப்படியாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், கடந்த 2 வாரங்களாக தொற்றின் பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. இந்த நிலையில், மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 21 லட்சத்து 13 ஆயிரத்தி 365 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 24 மணிநேரத்தில், மூன்று லட்சத்து 37 ஆயிரத்து 704 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதில்
குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் சிகிச்சை பலனின்றி, ஒரே நாளில், 488 பேர் உயிரிழந்துள்ள நிலையில்,  2 லட்சத்து 42 ஆயிரத்து 676 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் ஒமிக்ரான் தொற்றால் 10 ஆயிரத்து 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.