210 ரன்கள் குவித்து இந்தியா அதிரடி

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இன்றைய டி20 போட்டியில் இந்திய அணி 210 ரன்களை குவித்துள்ளது. டி20 உலகக் கோப்பைக்கான இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. அபுதாபியில் நடைபெறும் இந்த ஆட்டத்தில்…

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இன்றைய டி20 போட்டியில் இந்திய அணி 210 ரன்களை குவித்துள்ளது.

டி20 உலகக் கோப்பைக்கான இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. அபுதாபியில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கன் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

பேட்டிங்கில் களமிறங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடியது. கேஎல் ராகுல் மற்றும் ரோஹித் சர்மா ஜோடியாக களமிறங்கி அதிரடியாக ரன்களை குவிக்கத் தொடங்கினர்.

ராகுல் 48 பந்துகளில் 69 ரன்களையும், ரோஹித் சர்மா 47 பந்துகளில் 74 ரன்களையும் குவித்தனர். இதில் ராகுல் 2 சிக்ஸர்களையும், 6 பவுண்ட்ரிகளையும் விளாசினார். அதேபோல ரோஹித் 3 சிக்ஸர்களையும் 8 பவுண்ட்ரிகளையும் விளாசினர்.

இவர்களுக்கு அடுத்து களமிறங்கிய பண்ட் மற்றும் பாண்டியா ஜோடி, தலா 27, 35 ரன்களை குவித்தனர். 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 210 ரன்களை குவித்துள்ளது.

கடந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியை தழுவியிருந்த நிலையில் இந்த போட்டியில் அணியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.