30.9 C
Chennai
May 13, 2024
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

சுதந்திர தினம் 2023: இந்தியாவின் ஜவுளி பாரம்பரியத்தை பெருமைப்படுத்தி டூடுலை வெளியிட்ட கூகுள்

சுதந்திர தினத்தையொட்டி, கூகுள் மிகவும் தனித்துவமான டூடுலை உருவாக்கியுள்ளது. இந்த டூடுலில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அற்புதமான ஜவுளி கைவினைகளை கூகுள் காட்சிப்படுத்தியுள்ளது.

1947ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து இந்தியா சுதந்திரம் அடைந்து இன்றுடன் 76 ஆண்டுகள் நிறைவடைந்து 77-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த 77வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில், நாடு முழுவதும் இன்று சுதந்திரக் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதன் ஒரு பகுதியாக, கூகுள் நிறுவனமும் இந்த சிறப்பு நிகழ்வை தனது பாணியில் கொண்டாடி வருகிறது. சுதந்திர தினத்தையொட்டி, கூகுள் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் இந்திய கலாச்சாரம் மற்றும் அதன் வரலாற்று நிகழ்வுகளை பெருமைப்படுத்திடும் வகையில், வெவ்வேறு அம்சங்களுடன் கூடிய டூடுலை உருவாக்கி சிறப்பிப்பது வழக்கம்.

இதனை, கூகுள் நிறுவனம் கிட்டத்தட்ட இரண்டு சகாப்தங்களாக செய்து வருகிறது. கூகுள் Doodle என்பது கூகுளின் முகப்புப் பக்கத்தில் உள்ள லோகோவின் தற்காலிக மாற்றமாகும். முக்கிய விடுமுறைகள், திருவிழாக்கள் மற்றும் பிரபல கலைஞர்கள், கலைஞர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் வாழ்க்கை மற்றும் நினைவகத்தில் சிறப்பு டூடுல்களை உருவாக்குவதன் மூலம் அவர்களை கௌரவிப்பதே அவர்களின் நோக்கம்.

அதன்படி முதல் முறையாக 2004ஆம் ஆண்டு இந்திய சுதந்திர தினத்தன்று கூகுள் டூடுலை வெளியிட்டது. அதில் இந்திய தேசியக் கொடியின் எளிய விளக்கப்படம் இருந்தது. அதன்பின் பல வருடங்களில், நாட்டின் வளமான வரலாறு மற்றும் பல்வேறு கலாச்சாரங்கள் முதல் அதன் புகழ்பெற்ற அடையாளங்கள் மற்றும் பிரியமான விளையாட்டு அணிகள் வரை அனைத்தையும் டூடுல்ஸ் கொண்டுள்ளது.

அந்த வகையில், இன்று 77-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில், கூகுள் நிறுவனம் மிகவும் தனித்துவமான டூடுலை உருவாக்கியுள்ளது. இந்த டூடுலில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அற்புதமான ஜவுளி கைவினைகளை கூகுள் காட்சிப்படுத்தியுள்ளது. இந்த ஜவுளி கைவினை மரபுகளை காட்சிப்படுத்துவதன் மூலம் இந்தியாவின் 77வது சுதந்திர தினத்தை கூகுள் டூடுல் சிறப்பித்துள்ளது. ஆகஸ்ட் 15க்கான இந்த கூகுள் டூடுலை புது டெல்லியைச் சேர்ந்த கைவினை கலைஞர் நம்ரதா குமார் என்ற திறமையான கலைஞர் உருவாக்கியுள்ளார். இது நாட்டின் வளமான மற்றும் மாறுபட்ட பாரம்பரியங்களை சித்தரிக்கிறது.

1947ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து இந்தியா சுதந்திரம் அடைந்த இந்த நாளில்தான் புதிய சகாப்தம் தொடங்கியதாக டூடுலுடன் வெளியிடப்பட்ட உரையில் கூகுள் கூறியுள்ளது. கூகுள் உருவாக்கியுள்ள இந்த டூடுல், உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த திறமையான கைவினைஞர்கள், விவசாயிகள், நெசவாளர்கள், அச்சுப்பொறிகள் மற்றும் எம்ப்ராய்டரி செய்பவர்களின் கூட்டு கைவினைத்திறனைக் காட்டி சிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  • பி.ஜேம்ஸ் லிசா

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading