ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து வேலை செய்வதற்காக ரயில் மூலம் திருச்சிக்கு வந்த சிறுவர்களை ரயில்வே போலீசார் மீட்டனர்.
ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனம் ஒன்றில் வேலை செய்வதற்காக ரயில் மூலம் மூன்று சிறுவர்கள் திருச்சிக்கு பயணித்து வந்துள்ளனர். இந்நிலையில், திருச்சி ரயில் நிலையத்திற்கு அச்சிறுவர்கள் வந்தடைந்த நிலையில், அவர்களை திருச்சிராப்பள்ளி ரயில்வே சந்திப்பில் ரயில்வே போலீசார் கண்டறிந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அவர்களின் பயனம் குறித்து சிறுவர்களை விசாரணை செய்ததில் அச்சிறுவர்கள் திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனம் ஒன்றில் வேலை செய்வதற்காக எடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து திருச்சி ரயில்வே போலீசார் அச்சிறுவர்களை மீட்டுள்ளனர்.
இதனையடுத்து, பேசிய ரயில்வே துறை காவல் அதிகாரி, இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 24-ன் படி பதினான்கு வயதிற்குட்பட்ட அனைவரும் குழந்தைகள் எனவும், குழந்தைத் தொழிலாளர் சட்டம் 1986-இன் படியும் பதினான்கு வயதிற்குட்பட்டவர்கள் குழந்தைகள் தான் எனவும், இதனால் 14 வயதிற்கு உட்பட்டவர்கள் தொழில் செய்வதற்காக ஈடுபடுத்தக் கூடாது என சட்டத்தை மேற்கோள் காட்டி பேசினார்.
மேலும், வடமாநிலங்களில் இருந்து தமிழகத்தின் கோவை, திருப்பூர் போன்ற பகுதிகளுக்கு சிறுவர்கள் பணி புரிவதற்காக வரக்கூடிய நிகழ்வு கடந்த சில மாதங்களாக இல்லாமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளதாக ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இவ்வாறு சிறுவர்கள் வேலையில் ஈடுபடும் நிலை உரிய நடவடிக்கையுடன் தடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.
கொரோனா காலக்கட்டத்தில் வறுமையால் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. தற்போது சற்றே குறைந்த நிலையில் தற்போது மீண்டும் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.