36.9 C
Chennai
May 30, 2024
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

புதுச்சேரியில் விடுதலைப் போராட்ட தியாகிகளின் மாதாந்திர உதவித்தொகை உயர்வு – ஆளுநர் தமிழிசை ஒப்புதல்

புதுச்சேரியில் விடுதலைப் போராட்ட தியாகிகளின் மாதாந்திர உதவித்தொகையை ரூ.10,000-ல் இருந்து ரூ.12,000 ஆக உயர்த்தி வழங்க புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 16-ஆம் தேதி நடைபெற்ற புதுச்சேரி சுதந்திர தினக் கொண்டாட்டத்தின்போது முதலமைச்சர் ரங்கசாமி உறுதியளித்து இருந்ததை அடுத்து, புதுச்சேரி மாநில விடுதலைப் போராட்ட தியாகிகளின் மாதாந்திர உதவித்தொகை ரூ.10,000-ல் இருந்து ரூ.12,000 ஆக உயர்த்தி வழங்க அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த உதவித்தொகை உயர்வானது நவம்பர் 01-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் புதுச்சேரியில் 939, காரைக்கால் பகுதியில் 174, மாஹே பகுதியில் 87, ஏனாம் பகுதியில் 1 என மொத்தம் 1,201 விடுதலைப் போராட்ட தியாகிகளின் குடும்பங்கள் பயன்பெறும் என்று புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள் : ரூ.2,042 கோடி நன்கொடை – முதலிடத்தை தக்கவைத்த ஷிவ் நாடார்..!

மேலும், மாதாந்திர உதவித்தொகை உயர்த்தப்படுவது தொடர்பாக புதுச்சேரி மாநில விடுதலைப் போராட்ட தியாகிகள் மாதாந்திர உதவித் தொகை விதிகள்,1970-ல் திருத்தம் மேற்கொள்ளவும் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளதாக துணைநிலை ஆளுநர் செயலகம் தெரிவித்துள்ளது. 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading