கரூரில் 8 இடங்களில் வருமான வரித்துறை சோதனை!

கரூரில் 8-வது இடமாக செங்குந்தபுரம் மூன்றாவது கிராஸ் பகுதியில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.  கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் மே மாதம் 26-ம் தேதி வருமான வரி துறையினர்…

கரூரில் 8-வது இடமாக செங்குந்தபுரம் மூன்றாவது கிராஸ் பகுதியில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் மே மாதம் 26-ம் தேதி வருமான வரி துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனை சுமார் 8 நாட்கள் நீடித்தது. இதனைத்தொடர்ந்து இரண்டாவது முறையாக ஜூன் 23-ம் தேதி வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் மூன்றாவது கட்டமாக கரூரில் வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். கொங்கு மெஸ் உணவக உரிமையாளர் மணி என்ற சுப்பிரமணி வீடு, சக்கி மெஸ் உணவகம் ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இதேபோல் சின்ன ஆண்டாங்கோவில் பாரி நகரில் உள்ள ராம விலாஸ் நிறுவனத்திலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் அதிபன் கேபிடல்ஸ் என்னும் நிதி நிறுவனத்திலும், கோவை சாலையில் உள்ள குறிஞ்சி பைனான்ஸ் உள்ளிட்ட 7 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனை நடைபெறும் இடங்களில் துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ந்து மாநகராட்சிக்குட்பட்ட 80 அடி சாலையில் அமைந்துள்ள அரசு ஒப்பந்ததாரர் சங்கர் ஆனந்த் அலுவலகத்தில் ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த சீலை அகற்றிவிட்டு சோதனை நடத்தினர்.

இந்நிலையில் 8 -வது இடமாக செங்குந்தபுரம் மூன்றாவது கிராஸ் பகுதியில் உள்ள அரசு ஒப்பந்ததாரர் எம்.சி.எஸ்.சங்கர் ஆனந்தின் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பாதுகாப்பு பணிகளுக்காக மத்திய துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.