இலங்கையில் நெருக்கடியான சூழலில், அதிபரால் நியமிக்கப்பட்ட 4 அமைச்சர்கள் பதவியேற்றனர்.
கடும் பொருளாதாரா நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் மற்றும் பொதுமக்கள் தெருவில் இறங்கி போராடினர். இந்த போராட்டம் தீவிரமடைந்த நிலையில், நாட்டில் அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டது. இதனிடையே, கொழும்பில் நள்ளிரவு நடைபெற்ற இலங்கையின் அமைச்சரவையின் அவசர கூட்டத்தில், பிரதமர் கோத்தபய ராஜபக்ச தவிர ஒட்டு மொத்த 26 அமைச்சர்களும் பதவி விலகுவதாக அறிவித்து அதற்கான கடிதத்தை பிரதமரிடம் வழங்கினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனை தொடர்ந்து அமைச்சர்களின் ராஜினாமா கடிதத்தை அதிபர் கோத்தபய ராஜபக்சவிடம் பிரதமர் மகிந்த ராஜபக்ச வழங்கினார். இதனை ஏற்றுக்கொண்ட அதிபர் கோத்தபய ராஜபக்ச, அமைச்சர் பதவிகளை ஏற்று தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண எதிர்க்கட்சிகள் முன்வரவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்க நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் பொறுப்புள்ளது என அதிபர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, காபந்து அரசாங்கத்திற்கு உடன்பட எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதச மறுப்பு தெரிவித்துள்ளார். காபந்து அரசு என்பது உட்கட்சி அரசியலே தவிர வேறில்லை என குறிப்பிட்டுள்ளார். மேலும், புதிய இலங்கையானது வலுவான மாற்றங்களுடனேயே அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டும் என்றும், வெறும் தலைமை மாற்றங்களுடன் மட்டுமல்ல எனவும் சஜித் கூறியுள்ளார்.
இந்நிலையில், இலங்கை அமைச்சரவையில் இருந்து 26 பேர் ராஜினாமா செய்துள்ள நிலையில், புதிதாக 4 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அதிபர் கோத்தபய ராஜபக்ச அறிவித்துள்ளார். அதன்படி, நிதியமைச்சராக அலி சப்ரியும், கல்வி அமைச்சராக தினேஷ் குணவர்தனவும் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சராக ஜி.எல்.பீரிஸும், நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அதிபர் கோத்தபய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார். புதிதாக நியமனம் செய்யப்பட்ட 4 அமைச்சர்களும் உடனடியாக பதவியேற்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.