கன்னியாகுமாரியில் மிகப்பெரிய வெற்றியை மக்கள் அளிப்பார்கள்! – பொன்.ராதாகிருஷ்ணன்

கன்னியாகுமாரியில் இந்தமுறையும் மிகப்பெரிய வெற்றி வாய்ப்பை மக்கள் எனக்கு அளிப்பார்கள் என அத்தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில்…

கன்னியாகுமாரியில் இந்தமுறையும் மிகப்பெரிய வெற்றி வாய்ப்பை மக்கள் எனக்கு அளிப்பார்கள் என அத்தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய பொன். ராதாகிருஷ்ணன், “கட்சியின் தலைமை என் மீது அளப்பரிய நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை எனக்கு அளித்ததிற்கு நன்றி. அமைச்சராக பதவி வகித்தபோது நான் எப்படி செயல்பட்டேன் என்பது பொது மக்களுக்கு நன்றாக தெரியும். எனவே இந்தமுறை மிகப்பெரிய வெற்றி வாய்ப்பை பொதுமக்கள் எனக்கு அளிப்பார்கள்.

நான் கடந்த முறை வெற்றி வாய்ப்பை இழந்தபோது, பணிகள் பாதியில் நின்று போகக் கூடாது என்பதற்காக அப்போதைய எம்.பி. வசந்தகுமாருக்கு முழு ஒத்துழைப்பை அளித்தேன். இந்த முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதும் நான் முன்னெடுத்த அனைத்து பணிகளும் முடிக்கப்படும். பொதுமக்களுக்கு விருப்பம் இல்லாத எந்த திட்டத்தையும் கொண்டுவரப்போவதில்லை. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் தொழில் வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவேன்.” என்று வாக்குறுதி அளித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.