சேலத்தில், 8-ஆம் வகுப்பு படிக்கும் அரசுப் பள்ளி மாணவர் ஒருவர், ஒன்பது புத்தகங்களை எழுதி சாதனைப் படைத்துள்ளார்.
சேலம் வாழப்பாடி அருகே முத்தம்பட்டி பகுதியை சேர்ந்த செல்வகுமார் – விஜயலட்சுமி, தம்பதியினரின் மகன் மதுரம் ராஜ்குமார். இவர் அரசுப் பள்ளியில் 8-ம் வகுப்பு பயின்று வருகிறார். கவிதையின் மீது கொண்ட தீரா காதலால், ராஜ்குமார், கவிதை, சிறுகதை உள்ளிட்ட பிரிவுகளில் ஒன்பது புத்தகங்களை எழுதி சாதனை படைத்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனால், சர்வதேச தமிழ் பல்கலைக் கழகம் சார்பாக முனைவர் பட்டம் மற்றும் பல்வேறு துறைசார்ந்த விருதுகளும் மாணவனுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், ராஜ்குமார் குறித்து அறிந்த மாவட்ட ஆட்சியர் கார்மேகம், அவரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
இதுவரை 36 விருதுகளை மாணவர் ராஜ்குமார் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மூன்றாம் வகுப்பு பயின்றபோது தந்தையிடம் கவிதை எழுதித் தரும்படி கேட்டுள்ளார். அப்போது, நீயாக முயற்சித்துப் பார் அவர் தந்தை கூறியதிலிருந்து, கவிதை மீதான ஆர்வம் பற்றிக் கொண்டதாக நெகிழ்சியுடன் தெரிவிக்கிறார்.