இலங்கையில் கைதான தமிழக மீனவர்களை மீட்க உடனடி நடவடிக்கை- ஜி.கே.வாசன்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 9 தமிழக மீனவர்களை  மீட்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜி.கே.வாசன்  வலியுறுத்தியுறுத்தி உள்ளார்.  இதுகுறித்து த.மா.க தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி வெளியிட்டுள்ள…

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 9 தமிழக மீனவர்களை  மீட்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜி.கே.வாசன்  வலியுறுத்தியுறுத்தி உள்ளார். 

இதுகுறித்து த.மா.க தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கையில், நாகை மீனவர்கள் மீன்பிடிக்க சென்றபோது இலங்கை கடற்படையால் 9 தமிழக மீனவர்களையும் , ஒரு படகையும் கைது செய்திருக்கின்றனர். தங்களின் வாழ்வாதாரத்திற்காக மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படை பல வருடங்களாக கைது செய்வதும், படகுகளை சிறைப்பிடிப்பதும், சேதப்படுத்துவதும் தொடர்கதையாக இருக்கின்றது. இச்செயல் மிகவும் வருத்தத்திற்குரியது.

இலங்கை, இந்தியாவுடன் ஒருபுறம் நட்புடனும், மறுபுறம் இந்திய மீனவர்களை கைது செய்வதும் வேடிக்கையாக இருக்கிறது. ஆண்டாண்டு காலமாக தொடரும் தமிழக மீனவர்கள் பிரச்சனையில் மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசுடன் பேசி பிரச்சனைக்கு, ஒரு நிரந்தர தீர்வுக்காண வேண்டும். வருங்காலங்களில் இதுபோல் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

தமிழக மீனவர்களின் கைது தொடர்பாக இலங்கை அரசுடன் பேசி கைது செய்யப்பட்ட மீனவர்களையும் , படகையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் என்று இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.