ஹிஜாப் அணிவதற்கு ஆதரவு அளிப்பதே இந்து மக்கள் கட்சியின் நிலைப்பாடு என அக்கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, ஹிஜாப்பிற்கு ஆதரவே இந்து மக்கள் கட்சியின் நிலைப்பாடு. நாங்களே ஹிஜாப் வழங்க இருக்கிறோம். இந்தியாவில் ஹிஜாப் அணிய முழு சுதந்திரம் உள்ளது அதை யாராலும் தடுக்க முடியாது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆனால்,பள்ளியில் சீருடைக்கே எங்கள் ஆதரவு. இதுதான் கர்மவீரர் காமராஜரின் வழி. முழு இந்துத்துவ கட்சியான இந்து மக்கள் கட்சி, ஆர்எஸ்எஸ், பாஜக என அனைத்துமே ஹிஜாபை ஆதரிக்கிறது. நாங்கள் ஹிஜாப் அணிவதை தடுக்கவில்லை, பள்ளியில் மாணவர்களுக்கு இடையே வேறுபாட்டை உருவாக்காத சீருடையே சரி என்கிறோம்.
ஹிஜாப் அணிய முழு உரிமை இந்தியாவிலிருக்கும் போது அதற்கு தடை என்பது போல இங்கே உணர்ச்சியை தூண்டுவது யார்? அவர்கள்தான் பூணூலை அறுப்போம் என வன்மத்தையும் தூண்டுகிறார்கள்.
இஸ்லாமியர்களை ஒடுக்குகிறார்கள் என்று பொய்யாக கலவரத்தை தூண்டுபவர்களே, பூணூலை அறுப்போம் என்று ஒரு சமூகத்துக்கு எதிரான வன்முறையையும் தூண்டுகிறார்கள். விசிக வன்னியரசு, தடாரஹீம் போன்றவர்கள் இந்த பிரச்சாரத்தை துவங்கியிருப்பது கலவர நோக்கம் கொண்டது.
தமிழகத்தில் அமைதியின்மையை உருவாக்கும் இவர்களை இந்த அரசு ஒடுக்க வேண்டும். இல்லை என்றால் இந்த விவாதங்கள் எங்கே போய் முடியுமென தெரியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.