தூத்துக்குடி அருகே வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற 30 கோடி ரூபாய் மதிப்புள்ள
போதைப் பொருளை க்யூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், வேம்பார் கடற்கரையில் தூத்துக்குடி கியூ பிரான்ச் பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜீவமணி வேல்ராஜ், வேலாயுதம், சுரேஷ்குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கடற்கரையில் நின்று கொண்டிருந்த படகில் இருந்த 8 பேர் கொண்ட கும்பலை சுற்றிவளைத்து போலீசார் சோதனை செய்ததில் அவர்களிடம் 2 கிலோ வீதம் 10பாக்கெட்டுகளில் கிரிஸ்டல் மெத்தாம்பேட்டமைன் என்னும் போதைப் பொருளை வைத்திருப்பது தெரியவந்தது.
அதில் 2 கிலோ வீதம் 10 பாக்கெட்டுகளில் போதைப் பொருள் வைத்திருந்தது கண்டறியப்பட்டது. அதனை பறிமுதல் செய்து விசாரித்தபோது கீழவைப்பார் பரலோக மாதா கோவில் தெருவை சேர்ந்த சிலர், போதை பொருளை இலங்கைக்கு கடத்த முயன்றது தெரியவந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருளின் விலை 30 கோடி ரூபாய் இருக்கும் என்று அதிகாரிகள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.







