உரிமைக்கு பேசினால் பாஸிஸ்ட் என்றால் அதைத் தொடர்ந்து செய்ய வேண்டி இருக்கிறது. ஆம் நான் பாசிஸ்டு தான் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர் சார்பில் ஆட்டோ மீட்டர்
கட்டணத்தை உயர்த்த வேண்டும் என வலியுறுத்தியும் பைக் டாக்சியை தடை செய்யக்கோரி அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் நாம் தமிழர் கட்சியின் தொழிற்சங்க அமைப்பை சேர்ந்தவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமான், கடந்த 2013ல் ஆட்டோ மீட்டர் கட்டணம் சீரமைப்பு நடைபெற்றது. அதே மீட்டர் கட்டணத்திற்கு இன்று ஆட்டோ ஓட்டுநர்கள் எப்படி ஆட்டோவை ஓட்ட முடியும் என கேள்வி எழுப்பினார். ஆட்டோ ஓட்டுனர்களுக்கு இன்று பிழைப்பு இல்லை எனவும் வட இந்தியர்களை ஆதரித்து பேசுபவர்கள் தமிழர்களின் நிலையை கண்டும் பாவப்பட வேண்டும் என்றார்.
ஒரு பிரியாணிக்கு 80 ரூபாய் வரை ஒரு பெரு முதலாளியின் நிறுவனமே எடுத்துச் செல்கிறது என குற்றம் சாட்டிய சீமான், ஜூமேட்டோ ஸ்விக்கி போன்ற நிறுவனங்களை அரசே நடத்தலாம் என்றும், சொந்த வாகனம் இருந்தாலும் இன்று உபர் ஓலாவிற்கு கீழ் தான் வேலை செய்ய முடிகிறது என்றார்.
மேலும், வெற்றிமாறன் மற்றும் களஞ்சியம் உள்ளிட்டோர் ஆகச்சிறந்த படைப்புகளை இளம் தலைமுறையினருக்கு வழங்கி வருகிறார்கள். வெற்றிமாறன் மனித உருவத்தில் இருக்கக்கூடிய மிருகம். அந்த வெறியில் படம் எடுக்கிறார். மிகுந்த சிரமப்பட்டு காட்டிற்குள் சென்று விடுதலை படத்தை உருவாக்கி இருக்கிறார் என பெருமிதம் கூறினார்.
ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக தமிழக ஆளுநர் தெரிவித்த கருத்துக்கு பதில்
அளித்த சீமான், பட்டினி சாவு வரை போராட்டம் நடத்துவேன் என போராட்டம் நடத்திய
பொன் ராதாகிருஷ்ணனுக்கு வெளிநாட்டில் இருந்து எங்கு பணம் வந்தது என கேள்வி
எழுப்பியதோடு ஆளுநர் ரவி திமிரில் பேசுகிறார் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், வேலைவாய்ப்பில் 80 சதவீதம் தமிழருக்கு கொடுங்கள் 20
சதவீதம் யாருக்கு வேண்டுமானாலும் கொடுங்கள். குஜராத், மகாராஷ்டிரா என அனைத்து
மாநிலங்களிலும் இதை பின்பற்றலாம் என்றும், நிலம் வளம் என்னுடையதாக இருந்தாலும்
வேலைவாய்ப்பு என்னுடையதாக இல்லை. இதை பேசினால் என்னை பாசிஸ்ட்
என்கிறார்கள். ஆம் நான் பாசிஸ்டு தான். உரிமைக்கு பேசினால் பாஸிஸ்ட் என்றால்
அதைத் தொடர்ந்து செய்ய வேண்டி இருக்கிறது என தெரிவித்தார்.