தமிழ்நாட்டின் உரிமைக்கு குரல் கொடுக்கவே தலைநகருக்கு சென்றதாக, டெல்லி பயணம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை திருவான்மியூரில் கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் பொன்குமார் இல்ல திருமண விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை ஏற்று நடத்தி வைத்தார். பின்னர் மேடையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அண்ணா முதலமைச்சராக இருந்தபோதுதான் சீர்திருத்த திருமணங்கள் சட்டப்பூர்வமாக்கப்பட்டதாக தெரிவித்தார்.
திமுக அரசின் மீது பொதுமக்கள் வைத்துள்ள நம்பிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்த முதலமைச்சர், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வழியில், அவர் சாதிக்க நினைத்ததை சாதித்துக் காட்டுவேன் என்று உறுதியளித்தார்.
அண்மைச் செய்தி: ‘இலங்கை கடற்படையால் ராமேஸ்வரத்தை சேர்ந்த 12 மீனவர்கள் கைது’
டெல்லி பயணம் குறித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு குரல் கொடுக்கவே தலைநகருக்கு சென்றதாக விளக்கம் அளித்தார். மேலும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவே தான் என்றும் உழைப்பேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








