போலீஸ் ஏ.எஸ்.பிக்களாக இருந்த 4 பேருக்கு எஸ்.பி.க்களாக பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கான அறிவிப்பை அரசின் உள்துறை செயலாளர் பி.அமுதா ஐஏஎஸ் இன்று வெளியிட்டுள்ளார்.
திருச்சி சிறப்பு போலீஸ் படை ஏ.எஸ்.பி.யாக இருந்த ரவிச்சந்திரன், பதவி உயர்வு பெற்று திருச்சி மாநகர காவல்துறை தலைமையக துணை ஆணையராகவும், விழுப்புரம் காவலர் தேர்வு பள்ளி ஏ.எஸ்.பி.யாக இருந்த ரமேஷ்பாபு பதவி உயர்வு பெற்று சென்னை உயர்நீதிமன்ற பாதுகாப்பு துணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் அரியலூர் ஏ.எஸ்.பி.யாக இருந்த மலைச்சாமி, பதவி உயர்வு பெற்று சென்னை அறிவுசார் சொத்துரிமை பிரிவின் அமலாக்கத்துறை துணை ஆணையராகவும், சேலம் சைபர் குற்றப்பிரிவு ஏ.எஸ்.பி.யாக இருந்த செல்லபாண்டியன் பதவி உயர்வு பெற்று தமிழ்நாடு சிறப்பு காவல்படை ஆவடி 5-வது பட்டாலியன் கமாண்டன்டாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த அறிவிப்பினை அரசின் உள்துறை செயலாளர் பி.அமுதா ஐஏஎஸ் இன்று வெளியிட்டுள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா







