பெரியாரின் தத்துவங்களையும், அறிவையும் தான் மிக ஒழங்காக பின்பற்ற கூடியவன் என கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணியை கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா மரியாதை நிமித்தமாக சந்தித்தார். சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நடைபெற்ற இநத் சந்திப்பிற்கு பிறகு பேசிய சித்தராமையா, தான் பெரியாரின் தத்துவங்களையும் அறிவையும் மிக ஒழுங்காக பின்பற்றக் கூடியவன் என்றார். பெரியார் ஒரு மிகப்பெரிய சுதந்திரப் போராட்ட வீரர், இங்கு உள்ள அனைத்து திராவிட கட்சிகளையும் சந்திப்பதற்காக நான் வருகை தந்துள்ளேன் என கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
குறிப்பாக தற்பொழுது நான் வருகை தந்துள்ள பெரியார் திடலில் உள்ள தலைவர் கி.வீரமணியை எனக்கு பல ஆண்டுகளாக தெரியும். சமூகநீதி சட்ட திருத்தம் உள்ளிட்டவை திராவிட ஆட்சி காலத்திலேயே கொண்டு வரப்பட்டது. இன்று நடைமுறையில் உள்ள சட்ட இயக்கங்கள் அனைத்தும் பாபாசாதிக் அம்பேத்காரால் கொண்டு வரப்பட்ட சட்டங்கள் இன்றளவும் பின்பற்றப்படுகிறது.
சட்டமேதை அம்பேத்கரை பொறுத்த வரையில் சமூகத்தில் அனைவருக்கும் சம உரிமை என்கின்ற அவர் கொண்டு வந்த சட்டத்தின் முயற்சியை இன்றளவும் நாம் அதை நடைமுறை படுத்தி வருகிறோம். அவர் இருக்கக்கூடிய காரணத்தினால் மட்டுமே தான் ஒரு நல்ல ஆரோக்கியமான சமுதாயத்தை நம்மால் உருவாக்க முடியும் என சித்தராமையா தெரிவித்தார்.
– இரா.நம்பிராஜன்