ஆஸ்கர் விருது வென்ற பெருமைமிக்க இந்தியர்களுக்கு தலை வணங்குகிறேன் என நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டர் செய்துள்ளார்.
ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டது. இன்று காலை நடந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் நாட்டு நாட்டு பாடல் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் ஆஸ்கர் விருது பெற்றது. இதையடுத்து ஆர்ஆர்ஆர் படக்குழுவினருக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதே போல் தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் ஆர்ஆர்ஆர் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஆர்ஆர்ஆர் படத்தின் இசையமைப்பாளர் கீரவாணி, இயக்குநர் ராஜமௌலிக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் படத்தின் இயக்குநர் கார்த்திகி மற்றும் கோன்சால்வ்ஸ்க்கும் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். ஆஸ்கர் விருதை வென்ற பெருமை மிக்க இந்தியர்களுக்கு தலை வணங்குகிறேன் என்று ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் உதயநிதி தனது ட்விட்டர் பதிவில், முதுமலையில் யானை மற்றும் மனித பந்தத்தை அழியாத ஆவண குறும்படமான தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் என்ற படம் ஆஸ்கர் விருதை பெற்றிருப்பது இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்க்கும் தருணம் என குறிப்பிட்டுள்ளார்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள ட்விட்டர்பதிவில், தாயன்புடன் யானைகளை பராமரிக்கும் தமிழ்நாட்டின் முதுமலையை சேர்ந்த தம்பதி குறித்த ஆவண குறும்படமான ‘The Elephant Whisperers’ உலகின் உயரிய விருதான ஆஸ்கர் விருதை வென்றிருப்பது பெருமிதத்தையும், மகிழ்ச்சியையும் அளிக்கின்றது. அதே போல இந்திய மொழிகளில் வெளியான ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படத்தின் ”நாட்டு நாட்டு” பாடல் ஆஸ்கர் விருது பெற்று சாதனை படைத்திருப்பதும் கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்காக சிறந்த மூலப்பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்ற இசையமைப்பாளர் கீரவாணி, பாடலாசிரியர் சந்திரபோஸ் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர். அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
முதுமலையில் ஆதரவற்ற யானைக்குட்டிகளை பராமரித்து வரும் பொம்மன்-பெள்ளி இணையர் குறித்த தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் என்ற ஆவண குறும்படத்திற்கும் ஆஸ்கர் விருது கிடைத்திருப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது. அப்படத்தின் இயக்குநர் கார்த்திகி, தயாரிப்பாளர் குனீத் மோங்க ஆகியோருக்கு வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.