“தமிழ்நாட்டு மக்களின் உண்மையான பிரதிநிதி நான் தான்” – தவெக தலைவர் விஜய் பேச்சு!

கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் யாராலும் தொட முடியாது என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்தார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பல்வேறு மாவட்டங்களில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சந்திப்பு கூட்டங்களை நடத்தி வருகிறார். இந்த நிலையில் விஜய் பங்கேற்கும் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் தஞ்சை அருகே அய்யாச்சாமிபட்டி பிரிவு சாலை பகுதியில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக தவெக தலைவா் விஜய் சென்னையில் இருந்து தனி விமானத்தில் திருச்சி வந்த நிலையில் திருச்சியில் இருந்து சாலை மார்க்கமாக நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்க்கு வந்தார். அப்போது அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சந்திப்பு நிகழ்ச்சி தொடங்கியது. அப்போது பேசியவர்,

“தமிழ்நாட்டின் உண்மையான பிரதிநிதியாக நாம் இருக்கிறோம். நான் என்ன பேசினாலும் அதை திரித்து பேசுகிறார்கள். திமுக ஒரு தீய சக்தி என்று சிறிய குழந்தைகள் கூட சொல்ல ஆரம்பித்துவிட்டனர். தமிழ்நாட்டு அணி, டெல்லி அணி என்று சொல்கிறார்கள். கிரிக்கெட்டில் கூட தமிழ்நாட்டு அணியை டெல்லி அணியால் தொட்டுக் கூட பார்க்க முடியாது. அப்படி இருக்கும்போது, கிரிக்கெட்டில் விசில் போடுவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குத்தான். வரப்போகும் தேர்தலில் விசில் போடப்போவது நம்ம தவெகதான். தவெகதான் தமிழ்நாடு, தமிழ்நாடுதான் தவெக.

எனக்கும் என்னுடைய மக்களுக்கு நடுவில் யாராலும் நுழைய முடியாது. அம்மா பையன், அப்பா பையன், அண்ணன் தங்கை, அக்கா தம்பி உறவு. இது ஆழமான உறவு என்பதை தமிழக மக்கள் உணர்ந்திருப்பார்கள். மற்றவர்கள் இது தேர்தல், ஆனால் எனக்கும் என்னை நேசிக்கும் மக்களுக்கு இது எமோஷன்.

வீட்டுக்கு வீடு விஜய் என்பது இந்த தேர்தலில் 100 சதவீதம் நிரூபிக்கப்படும். அடுத்த ஜென்மத்தில் ஒரு விவசாயி குடும்பத்தில் பிறக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். எனக்கு விவசாயத்தை பற்றி விவரமாக தெரியாது. ஆனால் விவசாயிகள் பிரச்சினை பற்றி எனக்கு நன்றாக தெரியும். ஐநா சபை தண்ணீர் திவால் என்று கட்டுரை வந்தது. நிலத்தடி நீரை பாதுகாப்பாக வைக்க வேண்டும். மணல் கொள்ளை, கனிமவள கொள்ளை நடந்தால் நிலத்தடி நீர் எப்படி கிடைக்கும். மணல் மாஃபியா கும்பல் யார் திமுக தான். மொத்தத்தில் திமுக ஆட்சியில் தமிழ்நாடே திவால் ஆகப்போகிறது.

மழையில் நனைந்து நெல் சேதமான போது டெல்டாகாரன் என கூறிய நீங்கள் என்ன செய்தீர்கள். ஆட்சிக்கு வந்த உடனே பெரிய திட்டங்களை செய்ய வேண்டியது தானே. நமது ஆட்சி அடைந்தவுடன் உடனடியாக பெரிய திட்டங்களை நிறைவேற்றுவோம். அமைதியாக இருந்தால் எதுவுமே தெரியாமல் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.