ரூ.200 கோடியில் வள்ளலார் சர்வதேச மையம் நிறுவுவது குறித்து அறநிலையத் துறை ஆலோசனை நடத்தி வருகிறது என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில்
வள்ளலார் முப்பெரும் விழா தொடர்பாக தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டுள்ள
சிறப்புக் குழுவின் கூட்டம் அமைச்சர் பி.கே. சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:
முதலமைச்சரின் வழிகாட்டுதல்படி வள்ளலார் 200 என்ற தலைப்பில் முப்பெரும்
விழாவாக அக்டோபர் மாதம் 5-ம் தேதி முதல் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் 5-ம்
தேதி வரை 52 வாரங்கள் வள்ளலார் பெருமையை பறைசாற்றுகின்ற வகையில் தமிழ்நாடு
முழுவதும் நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக பி.கே.கிருஷ்ணராஜ் வானவராயர் தலைமையில் 14 பேர் கொண்ட குழு
அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவோடு ஆலோசிக்கப்பட்டு 10 முடிவுகள்
எடுக்கப்பட்டுள்ளது. அதில் வள்ளலாரின் இலட்சினை மற்றும் அதில் இடம் பெறக்கூடிய அம்சங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. அக்டோபர் மாதம் தொடங்கும் முதல் நிகழ்ச்சியை எங்கு நடத்துவது என்பது குறித்து முதலமைச்சரிடம் தெரிவித்து தேர்வு செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.
முதல் 10 நிகழ்ச்சிகளில் வள்ளலாரின் சிறப்புகளை எடுத்துக் கூறும் யார் யாரை
வைத்து, எந்தெந்த ஊர்களில் நடத்துவது என்பது குறித்தும் முதலமைச்சரின்
கவனத்திற்கு கொண்டு சென்று அறிவிக்கப்படும்.
வள்ளலார் தர்மசாலை நிறுவப்பட்ட இடத்தில் ரூ.200 கோடியில் வள்ளலார் சர்வதேச
மையம் ஒன்று நிறுவுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இந்த குழு சிறப்பு குழுவாக அறிவிக்கப்பட்டுள்ளதால், இதற்கு கால அளவு எதுவும் நிர்ணயிக்கவில்லை.
வடலூர் வள்ளலார் சன்மார்க்க ஆராய்ச்சி நிலையம் ஒன்றையும் ஏற்படுத்துவதற்கான
அனுமதியை முதலமைச்சரிடம் பெற உள்ளோம். யார் அமைச்சர்? யார் ஆட்சி? என்பது கோயிலின் பாதுகாப்பை, பூஜை புனஸ்காரங்களை செம்மைப்படுத்துவது தான் இந்தத் துறையின் வேலை.
விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிப்பதை விமர்சனம் ஆக்குவது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. தமிழில் அர்ச்சனை என்பது இப்போது தொடங்கப்பட்ட திட்டமல்ல. கலைஞர் கொண்டு வந்த திட்டத்தை புத்துணர்வு ஊட்டும் வகையில், திருக்கோயில்களில் அன்னைத் தமிழ் வழிபாடு என விளம்பர பலகை வைக்கப்பட்டு, அதில் அரசர்களின் பெயர்களும், கைபேசி எண்ணம் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பூஜைக்கான கட்டணத்தில் 60% தொகையை அர்ச்சகர்களுக்கே ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
விநாயகர் சதுர்த்தி குறித்த அண்ணாமலையின் கருத்துகள் மற்றும் முதலமைச்சர் மீதான விமர்சனங்கள் குறித்து பதிலளிக்க மறுத்து செய்தியாளர் சந்திப்பை முடித்துக் கொண்டார். அன்னை தமிழில் அர்ச்சனை என்பது முதலமைச்சர் பொறுப்பேற்றதும் தொடங்கப்பட்ட நிகழ்வு. தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று அதற்கான 16 புத்தகங்களை முதலில் வெளியிட்டவர் தமிழக முதல்வர் ஸ்டாலின்.
தமிழில் அர்ச்சனை செய்பவர்களுக்கான ஊக்கத்தொகையும் அறிவித்தவர் முதலமைச்சர்.
தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்பதில் இந்த அரசும் தமிழக முதல்வரும்
தெளிவாக இருக்கின்றனர். தமிழை தாங்கி பிடிக்கின்ற இயக்கம் திராவிட இயக்கம் என்று
சேகர்பாபு தெரிவித்தார்.