கொரோனா ஊரடங்கால் தொழில் பாதித்து வருவதாக பலர் கூறிவரும் நிலையில், ஹிமாச்சல் பிரதேசத்தை சேர்ந்த விவசாயிகள் செரி விவசாயத்தில் நல்ல லாபம் ஈட்டுவதாக தெரிவித்துள்ளனர்.
இமாச்சல பிரதேசத்தின், சிம்லா நகரின் அருகே உள்ள கண்டியளி (Kandiali ) கிராமத்தில் செரி விவசாயம் நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள காலத்திலும், செரிப்பழங்களின் மகசூல் நன்றாக இருப்பதாகவும், நல்ல விலைக்கு பழங்களை விற்பனை செய்வதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். ஒரு கிலோ செரி பழங்களை 175 முதல் 275 ரூபாய் வரை கொடுத்து தனியார் நிறுவனங்கள் வாங்கி செல்வதாக கூறியுள்ளனர்.







