அனைத்து வகை கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் UG, PG மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டுதல்களை உயர்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
கல்லூரிகள்/பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற வேண்டும். கட்டணம் எவ்வளவு? என்பதை கல்லூரியின் Prospectus-ல் வெளியிட வேண்டும். வெளிப்படைத்தன்மையுடன் கட்டணம் வசூலிக்க வேண்டும். ஒவ்வொரு படிப்பிலும் இட ஒதுக்கீடு கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும். இலங்கைத் தமிழ் அகதிகளுக்கான சேர்க்கை முழுவதும் மெரிட் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட வேண்டும்.
அவர்களின் அடையாள அட்டையை சரிபார்த்து சேர்க்கை வழங்கிட வேண்டும். ஆண்கள் கல்லூரியாக தொடங்கப்பட்டு பின்னர் இருபாலரும் பயிலும் கல்லூரியாக மாற்றப்பட்டவற்றில் 30%-க்கு மேல் பெண்களை சேர்க்கக் கூடாது. இஸ்லாமிய பெண்களுக்கு எந்தக் கல்லூரியிலும் இடம் மறுக்கப்படக் கூடாது இவ்வாறு வழிகாட்டுதல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-மணிகண்டன்








