குன்னுார் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்தில், தமிழ்நாடு அரசின் சார்பில், ட்ரோன் கேமிரா மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் நஞ்சப்ப சத்திரத்தில், ராணுவ ஹெலிகாப்டர் நேற்று விபத்துக்குள்ளானதில், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இவ்விபத்து தொடர்பாக தமிழ்நாடு அரசின் சார்பில் விசாரணை தொடங்கியுள்ளது. விபத்து நடந்த இடத்தை ட்ரோன் கேமிரா மூலம் படம்பிடித்து முதல்கட்ட விசாரணையை போலீசார் தொடங்கியுள்ளனர். இதற்காக, அண்ணா பல்கலைக்கழகம் மூலம் சிறப்பு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசு விசாரணை தொடக்கம் https://t.co/CnV8a3Z0Wm | #BipinRawatHelicopterCrash | #IndianArmy | #ArmyCDS | #Nilgiris | #IndianAirForce | #News7TamilUpdates | #news7tamil | #TNGovt | #TNPolice pic.twitter.com/1QKZOXnEeX
— News7 Tamil (@news7tamil) December 9, 2021
விபத்து குறித்து விசாரிப்பதற்காக அதிகாரியாக நியமிக்கப்பட்ட, ஏ.டி.எஸ்.பி முத்துமாணிக்கம், சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். அதேபோல, ஹெலிகாப்டர் விபத்து குறித்து விசாரணை நடத்த மத்திய அரசு நியமித்த விசாரனை அதிகாரியான மன்வேந்தர் சிங் சம்பவ இடத்திற்கு வருகைதந்துள்ளார்.
இந்நிலையில், ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த வீர்ர்களின் உடல்கள் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து விமானப்படை விமானம் மூலம் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டது.
#JUSTIN | டெல்லிக்கு அனுப்பப்பட்ட உடல்கள் https://t.co/CnV8a3Z0Wm | #BipinRawat | #HelicopterCrash | #IndianArmy | #ArmyCDS | #IndianAirForce | #News7TamilUpdates pic.twitter.com/ItViXxFDCQ
— News7 Tamil (@news7tamil) December 9, 2021