சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மழை பெய்த நிலையில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனிடையே நேற்று ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா, பெருந்துறை சாலை, மேட்டூர் ரோடு, நசியனூர் ரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுமார் ஒரு மணி நேரமாக கனமழை கொட்டித் தீர்த்தது. ஈரோடு ரயில் நிலையத்தில், பயணிகள் காத்திருப்பு அறை மற்றும் டிக்கெட் புக்கிங் செய்யும் இடங்களில் மழைநீர் புகுந்ததால், பயணிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகினர்.
இதையும் படியுங்கள் : “வயிற்றுப் பிரச்னை காரணமாக நான் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை” – மேக்னஸ் கார்ல்சன் பேட்டி
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே பஞ்சம்பட்டி கிராமத்தில் உள்ள கொண்டான் கண்மாய் பகுதியில் ஆடு மேய்த்து கொண்டிருந்த சிலர், திடீரென மழை பெய்யத் தொடங்கியதால் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது மின்னல் தாக்கியதில் முத்துச்சாமி என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. அப்போது வீசிய சூறைக்காற்றில் அடித்து வரப்பட்ட தகர கூரை விவசாயி செல்வராஜ் மீது விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மழையின் காரணமாக தமிழ்நாட்டில் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.