நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் நாளை முதல் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
2022-2023ம் கல்வியாண்டுக்கான இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு வரும் 17ம் தேதி நடைபெற உள்ளது. மருத்துவம் மற்றும் பல் மருத்துவர் படிப்புகளுக்கு தமிழ், இந்தி உள்பட 13 பிராந்திய மொழிகளில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. நீட் தேர்வுக்காக நாடு முழுவதும் 18 லட்சத்து 72 ஆயிரத்து 339 பேர் விண்ணப்பித்துள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தமிழ்நாட்டில் இருந்து 1 லட்சத்து 42 ஆயிரத்து 286 பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து உள்ளனர். இதில் நீட் தேர்வை தமிழ் மொழியில் எழுத 31,803 பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
வரும் 17ம் தேதி நடைபெற இருக்கும் நீட் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை நாளை முதல் இணையத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.