36.1 C
Chennai
May 30, 2024
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

15 ஆயிரம் அடி உயரப் பனியிலும் பணி செய்யும் காவலர்கள்

உத்தரகாண்ட், தேராதூன் பகுதியில் 15 அடி உயரத்தில் பனியிலும் அயராது பணி செய்யும் காவலர்களின் வீடியோவை இந்தோ திபெத்திய காவல்துறையினர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

உத்தரகாண்ட் மாநிலத்தின் தலைநகர் பகுதியாக தேராதூன் இருக்கிறது. இங்குள்ள மலைப்பகுதியில் அப்பகுதியின் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அப்படி ரோந்து பணிகளில் ஈடுபட்டு வரும் காவலர்கள் 0 டிகிரி குளிர் நிலவும் நேரத்திலும் அயராது உழைக்கின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இது தொடர்பான வீடியோவை இந்தோ திபெத்திய போலீஸார் தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். அந்த விடியோவில், காவலர்கள் தங்களது துப்பாக்கிகளை முதுகில் சுமந்துகொண்டு, முட்டளவு நிறைந்துள்ள பனியில் நடந்துசெல்கின்றனர். ஒவ்வொரு அடி எடுத்துவைக்கவும் மிகுந்த சிரமம்ப்படும் காவலர்கள் எந்த ஓய்வும் இல்லாமல் நடந்து செல்கின்றனர். மேலும் கயிறு ஒன்றின் உதவி மூலம் தொடர்ந்து பயணிக்கும் காவலர்கள் 15 அடி உயரத்தில் நிற்காமல் ரோந்து பணியில் ஈடுபடுவது எத்தகைய சவாலான பணி என்பதை விளக்குகிறது.

காவலர்கள் வெளியிட்ட பதிவில், “பயணம் கடினமாகும் போது, அந்த கடினத்துடனே சேர்ந்து பயணிக்க கற்றுக்கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளனர். 15 ஆயிரம் அடி உயரத்தில் 0 டிகிரி வெப்பநிலையில் அயராது உழைக்கும் இந்த காவலர்களின் பணி என்றுமே ஈடுகட்ட முடியாதது என்கின்றனர் சாமானியர்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading