கடந்த ஆண்டை விட ஜூலை மாத ஜி.எஸ்.டி.வசூல் 15 சதவீதம் அதிகரிப்பு!

ஜூலை மாத ஜிஎஸ்டி வசூல் கடந்த ஆண்டை விட 15.4 சதவீதம் அதிகரித்து 2 லட்சத்து 11 ஆயிரம் கோடி ரூபாயைக் கடந்துள்ளது.

கடந்த ஜூலை மாத மொத்த ஜிஎஸ்டி வசூல் கடந்த ஆண்டை விட 15.4 சதவீதம் அதிகரித்து 2 லட்சத்து 11 ஆயிரம் கோடி ரூபாயைக் கடந்துள்ளது. இது குறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜூலை மாதத்தில் மொத்த ஜி.எஸ்.டி., வசூல் ரூ.2,11,950 கோடி பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் வசூலான ரூ.1,83,660 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 15.4 சதவீதம் அதிகமாகும். உள்நாட்டு பரிவர்த்தனைகளில் இருந்து கிடைத்த ஜி.எஸ்.டி., வரி வசூல் கணிசமாக உயர்ந்துள்ளது. அதேபோல், இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் மீதான வரி வசூலும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மொத்த வரி வசூல் வலுவான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

பொருளாதார நடவடிக்கைகள் தொடர்ந்து மேம்பட்டு வருவதும், நுகர்வு மற்றும் வர்த்தக பரிவர்த்தனைகள் அதிகரித்திருப்பதும் வரி வசூல் உயர்வுக்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.