கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இதற்காக கேரளா செல்வதற்கு சென்னை விமான நிலையம் வந்த நடிகர் ரஜினி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்,
அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்தார். பாகிஸ்தான் நாட்டிற்கு உள்ளே சென்று அங்கு இருக்கும் தீவிரவாதிகள் முகாம்களை அழித்த இந்திய ராணுவத்திற்கு மிகுந்த பாராட்டுக்கள்.
இந்த போரை வலிமையாகவும், திறமையாகவும் கையாண்ட பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, முப்படை அதிகாரிகளுக்கும், முப்படை வீரர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள் என்று தெரிவித்துள்ளார்.







