முறைகேடுகளை களைந்து நகைக்கடன் தள்ளுபடியை அரசு செயல்படுத்தும்: நிதி அமைச்சர்

முறைகேடுகளை களைந்து நகைக்கடன் தள்ளுபடியை அரசு செயல்படுத்தும் என்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்து சட்டசபையில்…

முறைகேடுகளை களைந்து நகைக்கடன் தள்ளுபடியை அரசு செயல்படுத்தும் என்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. நிதியமைச்சர் பழனிவேல்
தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்து சட்டசபையில் உரையாற்றி வருகிறார்.

அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:

பெட்ரோல் மீது மாநில அரசின் வரியில் ரூ.3 குறைப்பு. இதனால் அரசுக்கு 1,160 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்

கூட்டுறவு சங்கம் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெற்ற கடன் தொகை ரு.2,756 தள்ளுபடி

முறைகேடுகளை கடந்து நகைக்கடன் தள்ளுபடியை தமிழ்நாடு அரசு செயல்படுத்தும்.

பெண்கள் உரிமைத் தொகை திட்டத்தை பெற ரேஷன் கார்டுகளில் குடும்பத் தலைவரின் பெயரை மாற்றத்தேவையில்லை.

பணியின் போது உயிரிழக்கும் அரசு பணியாளர்களின் குடும்பத்தினருக்கு குடும்ப பாதுகாப்பு நிதியில் இருந்து வழங்கப்படும் உதவி மானியம் 3 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தப்படும்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.