முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாய் தயாளு அம்மாளை, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நேரில் சந்தித்து உடல் நிலை குறித்து விசாரித்தார்.
கிருஷ்ணஜெயந்தியையொட்டி தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னை கோபாலபுரத்தில் உள்ள கிருஷ்ணர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோபாலபுரத்தில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு சென்று அவரது தாயார் தயாளு அம்மாளிடம் நலம் விசாரித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இது தொடர்பாக தமிழிசை சௌந்தரராஜன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள பதிவில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோபாலபுரம் கிருஷ்ணர் கோயில் சென்றேன். திரும்பும்போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சகோதரி தமிழ்ச்செல்வியை சந்தித்தேன். மரியாதை நிமித்தமாக இல்லத்திற்கு சென்று தயாளு அம்மாளை சந்தித்து உடல் நலம் விசாரித்தேன் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இதற்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி கருணாநிதி உடல் நலம் விசாரிக்க இதே இல்லத்திற்கு நான் வந்த நினைவுகளை பகிர்ந்து கொண்டார்கள் என குறிப்பிட்டு பிரதமர் மோடி வந்த புகைப்படத்தையும் டிவிட்டரில் தமிழிசை சௌந்தரராஜன் பதிவிட்டுள்ளார்.
– இரா.நம்பிராஜன்