புதுச்சேரியில் அரசுப் பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றம்!

புதுச்சேரியில் அரசுப் பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.   புதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளிகள், தற்போது காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 3:45 மணி வரை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சிபிஎஸ்இ…

புதுச்சேரியில் அரசுப் பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.  

புதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளிகள், தற்போது காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 3:45 மணி வரை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சிபிஎஸ்இ பாடத்திட்டம் இந்தாண்டு முதல் நடைமுறைக்கு வர உள்ளதால் அரசுப் பள்ளிகளிள் செயல்படும் நேரங்களை மாற்றியமைத்து கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி, பள்ளி முதல்வர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

அதன்படி, காலை 9 மணிக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு மதியம் 12. 25 மணிக்கு உணவு இடைவேளை விடப்படுகிறது. அதன்பிறகு 1.35 மணிக்கு தொடங்கி மாலை 4:20 மணி வரை பள்ளிகள் செயல்பட உள்ளன.

இடையில் இருமுறை 10 நிமிடங்கள் இடைவேளை விடப்படுகிறது. இந்த புதிய நடைமுறை வருகிற 15ம் தேதி காமராஜர் பிறந்தநாள் அன்று அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கேற்ப 8 பாடவேளைகளாக பள்ளிகள் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.