“உள்ளாட்சியிலும் நல்லாட்சி”- திமுக மாநாடு

உள்ளாட்சியிலும் நல்லாட்சி என்னும் தலைப்பில் ஜூலை மாதம் திமுக மாநாடு நாமக்கல்லில் நடைபெறுகிறது.  இதுகுறித்து திமுக கட்சி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “உள்ளாட்சியிலும் நல்லாட்சி” என்ற தலைப்பில், ஜூலை…

உள்ளாட்சியிலும் நல்லாட்சி என்னும் தலைப்பில் ஜூலை மாதம் திமுக மாநாடு நாமக்கல்லில் நடைபெறுகிறது. 

இதுகுறித்து திமுக கட்சி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “உள்ளாட்சியிலும் நல்லாட்சி” என்ற தலைப்பில், ஜூலை 3ம் தேதி நாமக்கல்லில் “நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு” நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, பொறுப்பேற்றுள்ள நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்கும் முதல் மாநாடு இதுவாகும். இதில் திமுகவின் முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமானகே.என்.நேரு முன்னிலையில், திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் 3.7.2022 அன்று (ஞாயிறு), காலை 9:30 மணி முதல் மாலை 5.00 மணிவரை நாமக்கல் மாவட்டத்தில் பொம்மகுட்டை  பகுதியில் நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில், பல்வேறு தலைப்புகளின் கீழ் பேச்சாளர்கள் சிறப்புரை ஆற்றவுள்ளார்கள். இதில் திமுக சார்பில் போட்டியிட்டு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநகராட்சி மேயர், துணை மேயர் – நகராட்சித் தலைவர்கள், துணைத் தலைவர்கள் – பேரூராட்சித் தலைவர்கள், துணைத் தலைவர்கள் – நகர்ப்புற உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் என அனைவரும் தங்களுக்கு அனுப்பப்படும் அழைப்பிதழுடன் இணைக்கப்பட்டுள்ள அனுமதி பேட்ஜ் பெற்று, இம்மாநாட்டில் தவறாது கலந்துகொள்ள வேண்டுமென அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.