தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நேற்று முன்தினம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. தொடர்ந்து நேற்றைய தினம் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படட்டது. இதையடுத்து இன்று காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. காணும் பொங்கலை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் சுற்றுலா தளங்கள், பூங்காக்கள், கடற்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று மகிழ்ச்சியுடன் நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தைச் சேர்ந்த புனிதன் என்பவர் தன் மகள் உத்திகா ஸ்ரீ (14) உடன் கோட்ட குப்பம் அருகே உள்ள கடற்கரைக்கு இன்று சென்றார்.








