தரமற்ற உணவு சாப்பிட்டு வயிற்று வலியான அவதியப்பட்டு வந்த ஆறாம் வகுப்பு பள்ளி மாணவி உயிரிழந்துள்ளார். மேலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் அருங்கல் துருகம் ஊராட்சி காரப்பட்டு பகுதியை சேர்ந்த காமராஜ். இவர் தேங்காய் உரிக்கும் கூலி வேலையை செய்து வருகிறார். இவருடைய மகள்கள் அருங்கல் துருவம் அரசு பள்ளியில் காமாட்சி 6ம் வகுப்பு, ஜோதிகா 10ம் வகுப்பு, பூமிகா 11ம் வகுப்பில் படித்து வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை இரவு கீரை குழம்பு கறி மற்றும் வேர்க்கடலை, சாதம் சாப்பிட்டு உள்ளார்கள். இதனால் இரவு முழுவதும் வாந்தி, பேதி ஏற்பட்டுள்ளது. இரண்டு நாட்களாக சிகிச்சை பெறாமல் வீட்டிலேயே இருந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து இன்று வயிற்றுப்போக்கு அதிகமாக இருந்ததால் இன்று அதிகாலை ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு 4 பேரும் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் காமராஜரின் கடைசி மகள் காமாட்சி வயது (11) என்கிற 6ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி வரும் வழியிலேயே சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.
மேலும் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் மூன்று பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து ஆம்பூர் அரசு மருத்துவமனை நிர்வாகம் காவல் நிலையத்திற்கு அளித்த தகவலின் அடிப்படையில் போலீசார் உடலை கைப்பற்றி ஆம்பூர் அரசு மருத்துவமனையில் பிரத சோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.