தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையின் கீழ் 37,554 அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் இந்த பள்ளிகளில் தற்காலிகமாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கியுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாட்டில் அரசு ஆரம்பப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தற்காலிக ஆசிரியர்களுக்கு 3 மாத ஊதியம் வழங்குவதற்காக ரூ. 27 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 2025-26 கல்வி ஆண்டுக்கான ஊதியம் வழங்க ரூ.91.41 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.







