கஞ்சா வியாபாரிகளின் சொத்துக்கள் முடக்கம்-காவல் துறை அதிரடி

தமிழகத்தில் கஞ்சா மற்றும் போதை விற்பனையை முற்றிலுமாக ஒழிப்பதற்கு தமிழக காவல்துறையால் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடும் சமூக விரோதிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டும், கைது…

தமிழகத்தில் கஞ்சா மற்றும் போதை விற்பனையை முற்றிலுமாக ஒழிப்பதற்கு தமிழக
காவல்துறையால் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கஞ்சா விற்பனை மற்றும்
கடத்தலில் ஈடுபடும் சமூக விரோதிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டும், கைது
செய்தும், கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகளை பறிமுதல் செய்தும் சட்டப்படியான
நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது.

அவ்வாறு எடுக்கப்படும் நடவடிக்கைளில் மிக முக்கியமானதாக கஞ்சா விற்பனையில் தொடர்ந்து ஈடுபடும் கொடுங்குற்றவாளிகளை கண்டறிந்து அவர்களை கட்டுப்படுத்தும் விதமாக அக்குற்றவாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துகளை முடக்கம் செய்யப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அவ்வாறாக ஏற்கனவே மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில்
குற்றவாளிகளின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை முடக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்சமயம் இதற்கு முன் இல்லாத வகையில் பாராட்டப்படும் விதமாக தமிழக காவல்துறையினர் மதுரையில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்டு வந்த ஒரு குடும்பத்தின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்களை முடக்கியுள்ளது.

அவற்றின் விபரம் பின் வருமாறு.

மதுரையில் போதை பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கஞ்சா விற்கும் தொழில் செய்து அதில் ஈட்டிய பணத்தையும், அதன் மூலம் வாங்கப்பட்ட சொத்துகளையும்  உறவினர்கள் பெயரில் ஈட்டிய சொத்துக்களையும் பறிமுதல் செய்யலாம் என்ற சட்டத்தின் அடிப்படையில் குற்றத்தில் ஈடுபட்டவர்களின் சொத்து விபரங்கள் சேகரிக்கப்பட்டு அவர்களின் உறவினர்களின் வீடுகளிலும் சோதனை செய்யப்பட்டு,
சொத்து விபரங்கள் கணக்கில் எடுக்கப்பட்டது.

இந்நிலையில் கஞ்சா வியாபாரிகளின் அசையும் மற்றும் அசையா
சொத்துக்களின் விபரங்களை சேகரித்து அனைத்தையும் முடக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு, இ.கா.ப அறிவுறுத்தலின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு 3 பேர்  மற்றும் அவர்களின் உறவினர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள், வாகனங்கள், வங்கி கணக்குகளில் உள்ள இருப்பு தொகை மற்றும் வரவு செலவு ஆகியவற்றை பற்றி விரிவாக கணக்குகள் எடுக்கப்பட்டும் நிதி விசாரணை செய்தும், சுமார் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டது என்று காவல் துறை தென் மண்டல தலைவர் வெளியிட்ட பத்திரிகை செய்தியில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.