34.4 C
Chennai
May 14, 2024
இந்தியா குற்றம் செய்திகள்

பெண்களுக்கு இலவச பேருந்து வசதிக்கு எதிர்ப்பு – தெலங்கானாவில் முதலமைச்சர் அலுவலகம் முன் ஆட்டோவுக்கு தீ வைத்த நபர்!

தெலங்கானாவில், “எங்கள் பிழைப்பில் மண்ணை அள்ளி போட்டு விட்டது” என்று முதலமைச்சர் அலுவலகம் எதிரே ஓட்டுநர் ஒருவர் ஆட்டோவுக்கு தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தெலங்கானாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு,  காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபின் மகாலட்சுமி என்ற பெயரில் பெண்களுக்கு இலவச பேருந்து வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. சொகுசு பேருந்துகளை தவிர மற்ற அனைத்து அரசு பேருந்துகளிலும் பெண்கள் தெலுங்கானா மாநில முழுவதும் இலவசமாக பயணம் செய்யலாம். அரசின் மகாலட்சுமி திட்டம் காரணமாக, தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதாக ஆட்டோ ஓட்டுநர்கள், டாக்ஸி ஓட்டுனர்கள் ஆகியோர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், தேவா என்ற ஆட்டோ ஓட்டுநர் நேற்று மாலை ஹைதராபாத்தில் உள்ள முதலமைச்சர் அலுவலகம் எதிரே மகாலட்சுமி திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தன்னுடைய ஆட்டோவிற்கு தீ வைத்தார்.  உடனே அங்கிருந்த போலீசார் உடனடியாக தீயணைப்பு வாகனத்திற்கு தகவல் அளித்து வரவழைத்து எரிந்து கொண்டிருந்த தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர்.  மதுபோதையில் இருந்ததாக கூறப்படும் ஆட்டோ ஓட்டுநர் தேவாவை போலீசார் அவருடைய
உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading