பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு ஜூலை 2 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது.
நடிகை சாந்தினி கொடுத்த பாலியல் புகாரை அடுத்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் திடீரென தலைமறைவானார். அடையாறு அனைத்து மகளிர் போலீசார், அவர் மீது 6 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மணிகண்டன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து தலைமறைவாக இருந்த மணிகண்டனை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
தனிப்படை போலீசார் அவரை பெங்களூரில் இன்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரிடம் போலீசார் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர். பின்னர், சைதாப்பேட்டையில், 17வது அமர்வு நீதிபதி கிருஷ்ணன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
நீதிபதி அவருக்கு ஜூலை 2 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தர விட்டார்.