நாகப்பட்டினத்தில் 58 ஆயிரத்து 143 அரியவகை ஆலிவ் ரெட்லி ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு, 50 ஆயிரம் ஆமை குஞ்சுகள் வனத்துறையினரால் கடலில் விடப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கோடியக்கரை முதல் கொள்ளிடம்
வரை 182 கிலோ மீட்டர் தூரம் உள்ள கடற்கரை பகுதிக்கு வரும் ஆமை இனங்கள்
அங்குள்ள மணல் குன்றுகளில் முட்டையிட்டு செல்கின்றன. இந்நிலையில் முட்டைகளை
சேகரித்து வரும் மாவட்ட வனச்சரக அலுவலர்கள் சீர்காழி, நாகை, கோடியக்கரை
உள்ளிட்ட எட்டு இடங்களில் குஞ்சு பொரிப்பகம் அமைத்து முட்டைகளை 45 நாட்கள்
முதல் 60 நாட்கள் வரை அடைகாத்து குஞ்சு பொறிக்க செய்து கடலில் விடுகின்றனர்.
கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நாகை, சாமந்தான்பேட்டை,
நாகூர் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளிருந்து சேகரிக்கப்பட்ட சுமார் 5
ஆயிரத்திற்கும் மேற்பட்ட முட்டைகளில் சாமந்தான் பேட்டை செயற்கை குஞ்சு
பொரிப்பகத்தில் 109 ஆலிவ் ரெட்லி ஆமைகள் குஞ்சு பொரித்தன.
இதனை இன்று வனச்சரக அலுவலர் ஆதிலிங்கம், வனக்காப்பாளர் ராஜேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் கடலில் விட்டனர். நாகை மாவட்டம் முழுவதும் இதுவரை இல்லாத அளவாக இவ்வாண்டு 58 ஆயிரத்து143 ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு, இதுவரை சுமார் 50 ஆயிரம் ஆலிவ் ரெட்லி ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளது.
ஆலிவ் ரெட்லி ஆமை குஞ்சுகள் கடலில் விடுவதில் நாகப்பட்டினம் மாவட்டம் தமிழகத்தில் முதல் இடத்தில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.








