உசிலம்பட்டி பூ மார்க்கெட்டில் பனிப்பொழிவு காரணமாக வரத்து குறைந்ததால்
மல்லிகை பூ 5500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மல்லிகை பூ 5500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்
அதிகப்படியாகச் சாகுபடி செய்யப்பட்டுள்ள மல்லிகை பூக்கள் பனிப்பொழிவு காரணமாகப் பூக்கள் செடியிலேயே அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக உசிலம்பட்டி மலர் சந்தைக்கு பூக்களின் வரத்து குறைந்து இன்று மல்லிகை பூ 5 ஆயிரம் முதல் 5500 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் கனகாமரை – 2000, மெட்ராஸ் மல்லி – 1300, பிச்சி – 1000, முல்லை – 1500 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.
கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு 1000 முதல் 1500 ரூபாய் வரை விற்பனை
செய்யப்பட்டு வந்த மல்லிகை பூ நேற்று 2000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட
நிலையில் நாளை சுப முகூர்த்த நாள் என்பதாலும் வரத்து குறைவு காரணமாகவும் இன்று
5500 ரூபாய்க்கும் கடுமையான உச்சத்தை அடைந்ததுள்ளது. நாளை முகூர்த்த தினத்தை முன்னிட்டு சங்கரன்கோவில் தினசரி மலர் சந்தையில் மல்லிகை பூ விலை கிடுகிடு உயர்வு. ஒரு கிலோ முதல் தர மல்லிகை பூ ரூபாய் 2000க்கு விற்பனை.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள 100க்கும்
மேற்பட்ட கிராமங்களில் மலர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்பகுதி விவசாயிகளால் மல்லிகை பூ, பிச்சிப்பூ, முல்லைப்பூ, கனகாம்பரம்,
செவ்வந்தி, கேந்தி, சேவல், சம்பங்கி உட்பட ஏராளமான மலர்கள் சாகுபடி
செய்யப்பட்டு, சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோவில்
தெப்பக்குள மண்டபத்தில் அமைந்துள்ள தினசரி மொத்த மலர் சந்தைக்கு கொண்டு
வருகின்றனர்.
அங்கு ஏலம் மூலம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்த சந்தையிலிருந்து தமிழ்நாடு மட்டுமல்லாது அண்டை மாநிலமான கேரளாவிற்கு அதிகளவு பூக்கள் கொண்டு செல்லப்பட்டு விற்பனையாகிறது.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக முதல் தர மல்லிகை பூ ஒரு கிலோ 1000 ரூபாய் வரை விற்பனையாகி வந்தது. ஆனால் நாளை வளர்பிறை முகூர்த்த தினம் என்பதால்
பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் பனி காலங்களில் குறைவான
விளைச்சல் தரக்கூடிய மலர் மல்லிகை என்பதால் தேவைக்கு ஏற்ப பூக்களின் வரத்து
இன்று சந்தையில் இல்லை.
இதனால் காலை 8 மணி முதல் தொடங்கி சந்தையில் ஏலம் விடப்பட்ட மல்லிகை பூ இறுதி நேர நிலவரமான 11.30 மணிக்கு ஒரு கிலோ 2000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன் படி 1 கிலோ மல்லிகை பூ ரூபாய் 2000, 1 கிலோ பிச்சி பூ ரூபாய் 1250, 1 கிலோ கனகாம்பரம் ரூபாய் 1200, 1 கிலோ கேந்தி ரூபாய் 600, 1 கிலோ சம்மங்கி ரூபாய் 1200, 1 கிலோ சேவல் ரூபாய் 100 என விற்பனை செய்யப்படுகிறது. இன்று உயர்ந்த மல்லிகை பூவின் விலையால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.